குரூப் 4 முறைகேடு: 12 பேர் மீது வழக்கு

  • In Chennai
  • January 24, 2020
  • 184 Views
குரூப் 4 முறைகேடு: 12 பேர் மீது வழக்கு

சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, வட்டாட்சியர்கள் வீரராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி., விசாரணை நடத்திய நிலையில், தற்போது, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் உள்ளிட்ட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 12 பேர் மீதும் 120பி, 420, 469, 467, 466 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்