சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, வட்டாட்சியர்கள் வீரராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி., விசாரணை நடத்திய நிலையில், தற்போது, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் உள்ளிட்ட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 12 பேர் மீதும் 120பி, 420, 469, 467, 466 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.