நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

  • In Cinema
  • September 20, 2019
  • 198 Views
நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

சென்னை:

சிறுமியை கொடுமைப்படுத்தியாக நடிகை பானுப்பிரியா மீது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஜனவரி 24ம் தேதி வரை ஓராண்டு நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைபடுத்தியதாக, கடந்த மார்ச் மாதம் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் நீதி சட்டங்கள், அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்