பஞ்சாப்:
கிறிஸ்தவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரவீணா டாண்டன், இயக்குநர் பராகன் மற்றும் நடிகை பாரதி சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விமர்சனங்களை மேற்கொண்டதாக அஜ்னாலா நகர கிறிஸ்தவ முன்னணி சார்பபில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மத நம்பிக்கைகளை அவமதித்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிந்து வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அஜ்நாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.