ஒசூர்:
ஒசூர் பகுதிகளில் கேரட் நல்ல விளைச்சல், தோட்டத்திலேயே ஒருகிலோ 25 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் நல்ல மண்வளமும், குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பழ வகைகள், கீர வகைகள், மலர் , காய்கறி உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஒசூர் பகுதிகளில் விளையும் விவசாய பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஒசூர் பகுதிகளில் தற்போது குளிர்காலம் நிலவுவதால் கேரட் அமோக விளைச்சலாக உள்ளது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கேரட் பயிரிட்டு சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்திட ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவிட்டுள்ள நிலையில், ஒரு ஏக்கரில் 15 டன்னிற்கும் அதிகமாக கேரட் விளைச்சல் இருப்பதால் அண்டை மாநில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களிலேயே கேரட் கிலோ 25 ரூபாய்க்கு பெற்று செல்வதாகவும் இதனால் ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.