காருக்குள்ளேயே கருகி 5 பேர்

காருக்குள்ளேயே கருகி 5 பேர்

சித்தூர்:

சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் விஷ்ணு என்பவர் தனது மனைவி ஜானவி, மகன் பவன்ராம், மகள் சாய் அஷ்விதா, தங்கை கலா, கலாவின் மகள் பானுதேஜா ஆகிய 5 பேருடன் பெங்களூருவுக்கு இன்று காலை காரில் சென்றுகொண்டிருந்தார்.

சித்தூர் மாவட்டம் கங்கவரம் அடுத்த மாமடுகு என்ற பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவர் மீது கார் அதிவேகமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. சில வினாடிகளில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காருக்குள் இருந்த 5 பேரும் உடல் கருகி இறந்தனர்.

விஷ்ணுவை மட்டும் பொதுமக்கள் போராடி மீட்டு பலமனேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்