சென்னை:
சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்திலிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு விமான நிலைய மேம்பாலத்தில் கார் சென்றுகொண்டிருந்தது. இந்த காரின் முன்பக்கத்தில் புகை வரத்தொடங்கிய¬தையடுத்து, உடனடியாக கார் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்துள்ளனர்.