கார் எரிப்பு; மேலும் 4 பேர் மீது குணடாஸ்

கார் எரிப்பு; மேலும் 4 பேர் மீது குணடாஸ்

ஒசூர்:

ஒசூர் அருகே தொழிலதிபரின் காரின் மீது பெட்ரோல் குண்டுவீசி இருவரை கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடந்தமாதம் தொழில்போட்டிக்காரணமாக ராமமூர்த்தி என்பவர் மதுரை கூலிப்படையை வைத்து நீலிமா என்பவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

திட்டமிட்டபடி நீலிமா வந்த காரின் மீது பெட்ரோல் குண்டுவீசியதில் நீலிமா மற்றும் டிரைவர் முரளி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தவழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்தவாரம் 4 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்த நிலையில் மேலும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ராமன் கூலிப்படையை சேர்ந்த ராமகிருஷ்ணா,அசோகன் மற்றும் முருகன் ஆகிய நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறைப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்