சிரியாவில் கார் குண்டு வெடிப்பு; 17 பேர் பலி!

சிரியாவில் கார் குண்டு வெடிப்பு; 17 பேர் பலி!

அஜாஸ்:

சிரியாவின் மாரக்கெட் பகுதியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் பலியாகினர்.

சிரியா அலெப்போ மாகாணத்தின் அஜாஸ் நகர் மசூதி ஒன்றில் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு துறந்த பின் ஏராளமானனோர் அங்கிருந்த மார்க்கெட் பகுதியில் கூடியிருந்தனர்.

அப்போது, அங்கு நிறுத்தியிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், 4 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உடல் சிதறி பலிகாகினர். மேலும், காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்