டிரைவருடன் தீயில் கருகிய கார்

டிரைவருடன் தீயில் கருகிய கார்

ஒசூர்:

ஓசூர் அருகே டிப்பர்லாரி – கார் மோதியதில், தீப்பற்றி எரிந்து கார் டிரைவர் கருகி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து இராயக்கோட்டையை நோக்கி டிப்பர் வாகனமும், இராயக்கோட்டையிலிருந்து ஓசூரை நோக்கி காரும் வந்துக்கொண்டிருந்தபோது, ஓசூர் – இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலை சானமாவு என்னுமிடத்தில் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

காரினுள் ஓட்டுநர் இருக்கையில் ஒருவரும், பின்புறமாக பெண் மற்றும் குழந்தை அமர்ந்து வந்துள்ளனர். இரண்டும் மோதிக்கொண்டபோது கார் தீப்பற்றி எரிய தொடங்கியதும் பெண், குழந்தை தப்பிவிட ஓட்டுநர் இருக்கையில் இருந்தவர் இடிபாடுகளில் சிக்கி வெளியே வரமுடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார்.

காரில் பற்றிய தீ டிப்பர் லாரியிலும் பரவி சாலையில் இரண்டு வாகனங்களும் கொழுந்து விட்டு எரிந்து வரும் தகவலையறிந்து ஓசூர் தீயணைப்புத்துறையினரும், உத்தனப்பள்ளி காவல்துறையினரும் தீயை அணைக்க போராடி அரை மணிநேரத்திற்க்கு பிறகாக தீயை முழுமையாக அணைத்தனர்.
அதற்குள்ளாகவே இரண்டு வாகனங்களும் தீயில் கருகி முழுமையாக நாசமாகின. உடல் கருகிய நிலையில் உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காரினுள் இருந்த பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார், டிப்பர் லாரி ஓட்டுநர் விபத்திற்கு பிறகாக தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.

மாநில நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்த சாலை விபத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்