ஆந்திரா:
ஆந்திர மாநிலத்தில் 280 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் கன்னவரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் இரண்டு வாகனங்களில் 280 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.