வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

அரியலூர்:

அரியலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அடுத்த அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவராக மருதமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மருதமுத்துவை எதிர்த்து போட்டியிட்ட பழனிவேல் என்பவர், வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்துள்ளளதாகக் கூறி மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என அவருடடைய ஆதரவாளர்கள் பெரம்பலூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனரர். மேலும், ஒருகட்டத்தில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்