போட்டோகிராபருக்கு வந்த சோதனை

போட்டோகிராபருக்கு வந்த சோதனை

ஒசூர்:

ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில், திருமணத்தில் போட்டோ எடுக்க வந்த போட்டோகிராபரின் கேமராக்கள் திருடிச்சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேன்கனிக்கோட்டையில் கடந்த 16ம் தேதி இரவு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு புகைப்பட கருவியை கொண்டு திருமண வரவேற்ப்பை புகைப்படம் எடுத்த மாதேஷ் என்பவர் இரவு முழுவதும் புகைப்படம் எடுத்த நிலையில் அதிகாலையில் மண்டபத்திலுள்ள தனது புகைப்பட கருவிகள் அடங்கிய பையை வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பருடன் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த அவர் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார் அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான கேமரா மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட மண்டபத்திற்கு சென்ற காவல்துறையினர் மண்டபத்தில் இருந்த சிசிடிவி வீடியோவை பார்த்தபோது அங்கு வைத்திருக்கும் அறையை நோக்கி சென்று கேமரா பையை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி திருடனை தேடி வருகிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்