ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கபே காபி டே நிறுவனர்.?

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கபே காபி டே நிறுவனர்.?

பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த், இவர் கபே காபி டே நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான வி.ஜி.சித்தார்த் மாயமாகியுள்ளார். சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பார்த்ததாக சிலர் கூறினர்.

இதனையடுத்து ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது தொலைபேசியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்