சென்னை:
சென்னை மாநகரப்போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாத இறுதியில் வழங்கப்படவேண்டிய ஊதியம் வழங்காததால் சிஐடியூ, திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.