பஸ் – லாரி மோதி விபத்து

பஸ் – லாரி மோதி விபத்து

ஒசூர்:

ஓசூர் அருகே டேங்கர் லாரி மீது தனியார் பேருந்து மோதி 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெண்ங்கூர் பகுதில் உள்ள பெட்ரோல் பங்கில் டிசெல் நிரப்பி கொண்டு பால் டேங்கர் லாரி பங்கில் இருந்து ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலைக்கு வந்தது அதேநேரம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளை.ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஓசூர் நோக்கி வந்தது.

அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பங்கில் இருந்து வெளியே வந்த பால் டேங்கள் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தார். மேலும் 5 பேர் சிறுயாகங்களுடன் தப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்து தேன்கனிக்கோட்டை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்