குள்ளு:
இமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் 50 பேருடன் தனியார் பேருந்து ஒன்று, பஞ்சாரிலிருந்து கடாகுஷானியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அந்த 50 பயணிகளில் சிலர் பேருந்தின் கூரை மீது ஏறி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.