ஹரியானா:
ஹரியானாவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
ஹரியானா மாநிலம், குருஷேத்ராவின் பிப்ளி பகுதியில் நேற்றிரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.