பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி

பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி

ஆந்திரா:

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதவரி மாவட்டத்தில் உள்ள மேரெடுமிலி மற்றும் சிந்துரு இடையேயான சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதே இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்