ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஒசூர் அருகே முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள்: காளைகளை அடக்க ஆர்வம் காட்டிய இளைஞர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை அருகே நெரிகம் என்னும் கிராமத்தில் பாரம்பரியமிக்க எருதுவிடும் விழா நடைப்பெற்றது.

முனீஸ்வரன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 300 க்கும் அதிகமான மாடு,காளைகளும், 500 க்கும் அதிகமான எருதுப்பிடி வீரர்கள் பங்கேற்றனர்

சூளகிரி,பேரிகை,தீர்த்தம்,வேப்பனஹள்ளி பகுதிகளிலிருந்து வந்த காளைகள், மாடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன.

காலை 9 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழா மதியம் 12 மணிவரை வெகு விமர்சையாக நடைப்பெற்றது, சீறி வந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், எருதுவிடும் விழா ஆர்வலர்கள் பங்கேற்ற எருதுவிடும் விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

மாடுகள் முட்டி காயமடைந்த 10க்கும் மேற்ப்பட்டோர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடி சிகிச்சையை வழங்கினர்.

பாகலூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான பேரிகை போலிசார் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்