சென்னை:
‘புல்புல்’ புயல் காரணமாக கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘புல்புல்’ புயலாக உருபெற்றுள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியதால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாளை காலை 6 மணி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘புல்புல்’ புயல் காரணமாக கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சுமார் 580க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.