மொகாலி:
பஞ்சாபில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள திரீ ஸ்டோரே என கட்டிடம் இன்று திடீரென இடிந்து தரைமட்டமானது. இதில் ஏராளானோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியது.
இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படை அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 2 பேரை மீட்டுள்ள நிலையில், இன்னும் 7 கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மொகாலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.