மும்பையில் கட்டிட விபத்தில் 12 பேர் பலி!

மும்பையில் கட்டிட விபத்தில் 12 பேர் பலி!

மும்பை:

மும்பை கட்டிட விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை டோங்ரியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். மேலும் பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 12 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்