காஷ்மீருக்கு சுற்றுலா செல்லாதீர்; பிரிட்டன் அறிவிப்பு

காஷ்மீருக்கு சுற்றுலா செல்லாதீர்; பிரிட்டன் அறிவிப்பு

லண்டன்:

காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்திலிருந்து மக்கள் யாரும் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவதாக உளவுத்துறையின் தகவலையடுத்து, அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், நேற்றுமுதல் அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து மக்கள் யாரும் காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலாச் செல்லவதை தவிர்க்க பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்