சுவர் இடையில் சிக்கிய சிறுவன்

  • In Chennai
  • December 25, 2019
  • 170 Views
சுவர் இடையில் சிக்கிய சிறுவன்

சென்னை:

சென்னை அடுத்த செங்குன்றத்தில் வீட்டின் சுற்றுச்சுவருக்கு இடையே சிக்கிய சிறுவனை தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த, செங்குன்றம் முண்டியம்மன்நகர் அசோக் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரத மகன் 12 வயதான நித்திஷ் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று இரவு நித்தீஷ் வீட்டின் முன் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, சுவர்களுக்கு இடையே புகுந்த சிறுவன் சிக்கிக்கொண்டான்.

இதனையடுத்து, நித்திஷ் கூச்சலிடவே, அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து மீட்க முயன்றும் முடியவில்லை.

பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நித்தீஷ் சிக்கி இருந்த தூணின் முன்பகுதியை லேசாக உடைத்து, சுமார் 2 மணி நேர போரராட்டத்துகக்குக பின், நித்தீசை பத்திரமாக மீட்டனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்