கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் வாகனம் கிணற்றில் விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரின் மனைவி வனிதா. இவர் ஊராட்சி குப்பை அள்ளும் மின் கல மூன்று ச க்கர வாகன ஓட்டுநராக உள்ளார்.

உயிரிழந்த சிறுவன் பாலாஜி.

 

மீட்கப்பட்ட வாகனம் மற்றும் அங்கு கூடியிருந்த மக்கள்.

வனிதா தனது 8 வயது மகன் பாலாஜியுடன் மூன்று சக்கர வாகனத்தில் சேகரித்த குப்பையை கொட்டிவிட்டு க.அலம்பலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் வாகனம் நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனிதா உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், கிணற்றில் மூழ்கிய சிறுவன் பாலாஜி மாயம £ன நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டனர்.

தாயுடன் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்