இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க முடியாது: சத்யபிரதா சாஹூ

இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க முடியாது: சத்யபிரதா சாஹூ

சென்னை:

தமிழகத்தில் காலயாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் உள்ளிட்ட 11 மாற்று ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்