தொண்டையில் சிக்கிய போண்டா; ஒருவர் பலி

தொண்டையில் சிக்கிய போண்டா; ஒருவர் பலி

சென்னை:

சென்னையில் தொண்டையில் போண்டா சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் நேற்று தனது தாயுடன் வெளியே சென்றபோது போண்டாக்களை வாங்கி வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்தவுடன் அதனை பத்மாவதி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தொண்டையில் போண்டா சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவே 108 ஆம்புலன்சுக்க போன் செய்துள்ளனர்.

உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துதவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்