மதுரை பஸ்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை பஸ்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

மதுரையில் உள்ள பேருந்து நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த அழைப்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்