சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை:

சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ, தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், தலைமை செயலகத்துக்கு வந்த கடிதத்தில், மர்மநபகர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது.

தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் தலைமை செயலகம் முழுவதும் பரபரப்பு நிலவிவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்