சேலம்:
சேலம் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில் நிலையத்திற்கு மர்மநபர்கள் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சேலம் ரயில்நிலையத்தில் பயணிகளிடையே பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.