சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சலில் வெடிகுண்டு

  • In Chennai
  • December 18, 2019
  • 184 Views
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சலில் வெடிகுண்டு

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சலில் 10 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சை நிறத்தில் பார்சல் ஒன்று, கடந்த 6 மாதங்களாக உரிமை கோராத நிலையில், அதனை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அந்த பார்சல் கடந்த ஏப்ரல் 24ம் தேதி சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நாக்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, பார்சலை ஆய்வு செய்த போது அதில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பார்சலை அனுப்பியவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில் நாக்பூரில் உள்ள, மத்திய வெடிமருந்து குடோனிலிருந்து இந்த 10 கையெறி குண்டுகளையும் பயிற்சிக்காக அந்தமான் நிக்கோபரில் உள்ள கி 172 இராணுவ பட்டாலியனுக்காக அனுப்பியதாக கூறியுள்ளார்.

பயிற்சிக்காக அனுப்பப்பட்டதை யாரும் உரிமை கோராதது சந்தேகம் ஏற்படுத்தி உள்ள நிலையில், அவை நக்சல் பயன்பாட்டிற்காக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்