ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இரு குண்டுகள் வெடித்ததில் 18 பேர் பலி மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஹஸ்கா மெய்னா மாவட்டத்தின் தாடை பகுதியில் மசூதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இரு குண்டுகள் வெடித்தது.
தொழுகையின்போது நடந்த இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.