விமான விபத்து: சொந்த ஊரில் தமிழக வீரரின் உடல்!

விமான விபத்து: சொந்த ஊரில் தமிழக வீரரின் உடல்!

கோவை:

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த 3ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்32 விமானம் மாயமாகி அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்தனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வினோத்தும் ஒருவராவார். இவரின் உடல் சொந்த ஊரான கோயம்புத்தூரை அடுத்த ஒண்டிப்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்