குவெட்டா:
பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு அரங்கேறியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் தலைநகர் குவெட்டாவின் டபுள் ரோடில் உள்ள கார் ஷோரூம் முன்பு நடந்த இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவம், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் கடந்த 2004ம் ஆண்டு இதேபோல் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.