ரஷ்ய வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர விபத்து..! 38 பேர் படுகாயம்!!

ரஷ்ய வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர விபத்து..! 38 பேர் படுகாயம்!!

டிஸ்சின்கின்ஸ்க்:

ரஷ்ய வெடிமருந்து தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிஸ்சின்கின்ஸ்க் நகரில் உள்ள ஜெஎஸ்சி கிரிஸ்டல் ஆராய்ச்சி மையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 38 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
வெடிவிபத்தின்போது அங்கிருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் கூறும்போது உள்ளே ஊழியர்கள் யாரும் தென்படவில்லை என தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்