பா.ஜ., து.தலைவரை காலால் உதைப்பு

பா.ஜ., து.தலைவரை காலால் உதைப்பு

கரீம்பூர்:

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., துணைத் தலைவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய திரிணாமுல் காங்கிரசாரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ., கட்சியின் மாநில துணைத் தலைவரும், கரீம்பூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான ஜாய் பிரகாஷ் மஜும்தார் வாக்குப்பதிவு இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது குற்றம்சாட்டி காலால் எட்டி உதைத்து தள்ளினர்.

உடனடியாக அங்கு விரைந்த பாதுகாப்பு போலீசார், அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து விரட்டினர். இது அப்பகுதியில் பெரும் பரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்