அசான்சோல்:
மேற்குவங்க மாநிலத்தில் பாஜ., அலுவலகம் தீவைக்ப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம், அசான்சோல் அடுத்த சலான்பூர் கிராமத்தில் பாஜ., அலுவலகத்துக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.
இந்த தீவைப்பு சம்பவத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் தான் என்று, பா.ஜ., குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தீவைத்தவர்கள் குறித்து மேற்குவங்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.