அசாம்:
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ. ஒருவர், தானே உணவு சமைத்து வழங்கி வருகிறார். இதனால் அவரை அந்த தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அசாமின் அம்தய் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. மிரினால் சாய்கியா, தனது சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகித்து வருகிறார். இதுவரை அவர் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியுள்ளார்.