அமித்ஷா தலைமையில் நாளை தே.ஜ.கூட்டணி கட்சிக் கூட்டம்!

அமித்ஷா தலைமையில் நாளை தே.ஜ.கூட்டணி கட்சிக் கூட்டம்!

புதுடெல்லி:

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பின் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள், பா.ஜ., கூட்டணி பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில், தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டம் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனையடுத்து தேர்தல் முடிவு வெளியானபின், வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களும், மே 24ம் தேதி டெல்லியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்