குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு நபர் பாதிக்கப்பட்டதாக நிருபித்தால் 1 கோடி ரூபாய் பரிசளிப்பதாக பாஜகவினர் One Crore Challenge போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து தமிழகம் முழுவதும் சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியக் குடிமக்களில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதை நிருபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பாஜகவினர் சென்னை சேப்பாக்கத்தில் One Crore Challenge சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.