சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ சந்தித்து பேசினார்.
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான குழு, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து பேசினர். சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில், புதிய உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.