பைக் திருட்டில் மர்ம நபர்

பைக் திருட்டில் மர்ம நபர்

ஒசூர்:

ஓசூர் அருகே பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பெப்பாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இன்று வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சூளகிரி வந்ததாக கூறப்படுகிறது.

சூளகிரி பேருந்து நிலையம் எதிரில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் அருகில் ரமேஷ் அவர்களும் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு எதிரில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ரமேஷ் அவர்களின் இருசக்கர வாகனத்தை நேக்காக திருடி சென்றுள்ளார். வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற போலிசார், அருகில் கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்