பிகில் படத்துக்கு தொடரும் புகார்

  • In Cinema
  • October 23, 2019
  • 215 Views
பிகில் படத்துக்கு தொடரும் புகார்

சென்னை:

பிகில் படத்திற்கு தொடர்ந்து புகாரளித்துள்ள நிலையில், மீண்டும் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல், தெலங்கானாவில் எழுத்தாளர் ஒருவர் தனது கதையை போலவே பிகில் திரைப்படத்தின் கதை உள்ளதாக அம்மாநில எழுத்தாளர்கள் சங்கத்தில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில், பிகில் படத்தின் அதிகாலை காட்சியை தடை செய்யக்கோரியும், நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் அதிக பணம் வசூலித்தால் திரையரங்கத்தின் உரிமையை ரத்து செய்யக்கோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகாரளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்