சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் கதை என்னுடையதுதான் என மேலும் ஒரு இயக்குனர் புகாரளித்துள்ளார்.
விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிகல் படத்தின் கதை என்னுடையதுதான் என உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இயக்குனரும் எழுத்தாளருமான நந்தி சின்னி குமார், தெலங்கானா எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய கதையை முன்மாதிரியாக்கொண்டு ‘பிகில்’ திரைப்படத்தை இயக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.