100க்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டை..! கள்ள துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

100க்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டை..! கள்ள துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

செங்கம்:

செங்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளை வேட்டையாடி கொன்று குவித்தவர் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், கள்ள துப்பாக்கி மூலம் ஒருவர் பறவைகளை கொன்று குவித்து வந்துள்ளார்.

பறவைகளை வேட்டையாடும் நபரை வனத்துறையினர் கைது செய்யவேண்டும் என வேண்டும் எனவும், வனத்துறையினர் மெத்தனப்போக்கால் தொடர்ந்து வேட்டை சம்பவங்கள் அதிகரித்துவருகிறன என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், 100க்கும் அதிகமாக பறவைகளை கொன்று குவித்த அந்த நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் வைத்திருந்தது கள்ள துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்