பவானி:
நீர்வரத்து குறைந்ததன் காரணமாக விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் குறைவு காரணமாக, பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 62.3 அடி மட்டுமே உள்ளது.
போதிய நீர் இருப்பு இல்லாததால், முதல் போக சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.