பவானி:
தமிழகத்தில் உள்ள அணைகளில் சிறந்த பராமரிப்புக்கான விருத்துக்கு பவானிசாகர் அணை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில், அணைகளின் பராமரிப்பு பணி, கருவிகள் செயல்பாடு, பராமரிப்பு ஆவணங்களின் தொகுப்பு ஆகியவற்றை அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
முல்லைபெரியாறு, மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பவானிசாகர் அணை, கோமுகி நதி, ஆணைமடுவு, கரியகோயில், பொன்னியாறு அணை ஆகிய அணைகளை இந்த குழு பரிந்துரை செய்தது.
இந்த அணைகளில், சிறந்த பராமரிப்புக்காக 2016-17ம் ஆண்டுக்கான விருது பெருஞ்சாணி அணைக்கும், 2017-18ம் ஆண்டுக்கான விருது பவானிசாகர் அணைக்கும் வழங்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி மேற்கொண்ட உதவிப்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், அணைகள் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் தலைமைப்பொறியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கியும் கவுரவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.