லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்

லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்

மும்பை:

மும்பையை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை சேர்த்துவிட்டு ரயிலில் அடிப்பட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கோவாண்டி பகுதியில் வசித்த பிச்சை எடுக்கும் தொழிலை செய்துவந்த புர்ஜூ சந்திர ஆசாத் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இவர் வங்கியில் ரூ.8.77 லட்சத்தை டெபிசிட் செய்துள்ள தெரியவந்தது. மேலும், இவரது வீட்டில் ரூ.1.5 லட்சம் சில்லரை நாணயங்களை போலீசார் மீட்டுள்ளனர்.

பிச்சை எடுத்து லட்சக்கணக்கில் பணம் சேர்த்துவைத்துவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்