சென்னை:
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ‘கொரானா’ வைரஸ் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ‘கொரானா’ வைரஸ் பரவாமல் தடுக்க எ டுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ர £ஜேஷ், விமான நிலைய ஆணைய இயக்குனர் தீபக், மற்றும் பொது சுகாத £ரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘கொரோனா’ வைரஸ் தெ £டர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார். தமிழகத்தில் இதுவரை ய £ருக்கும் பாதிப்பில்லை. 15,000 பயணிகளுக்கு பரிசோதனை செய்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், விமான நிலையத்தில் பயணிகள் தொடக்கூடிய பொருட்களை சுத்தம் செய்வது குறித்தும், பொது இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டுமென்றும், தும்மல், இருமல் இருந்தால் வாயில் துணியால் மூடிக் கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு பீலா ராஜேஷ் அறிவுறுத்தினார்.