சென்னை:
வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்களாகவும், கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமாகவும் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம்
1.திருப்பத்தூர்
2.நாட்றம்பள்ளி
3.வாணியம்பாடி
4.ஆம்பூர்
வேலூர் மாவட்டம்
1.பேர்ணாம்பாட்டு
2.குடியாத்தம்
3.காட்பாடி
4.வேலூர்
5.அணைக்கட்டு
ராணிப்பேட்டை மாவட்டம்
1.ஆற்காடு
2.வாலாஜா
3.நெமிலி
4.அரக்கோணம்